திருமயம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே மணவாளன்கரையில்14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி திருமயத்தில் சிபிஐ(எம்), இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மாதர் சங்க தலைவர் சுசிலா தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தில் 25 பேர் கலந்து கொண்டனர். இந்தசம்பவம் தொடர்பாக திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளனர். ஆனால் எதிரி தலைமறைவானதால் போலீசார் எதிரியை வலை வீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக