நெமிலி அருகே கடம்பநல்லூர் கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு ஆய்வு!!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமம் போஸ்ட் ஆபீஸ் தெரு மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில், சாலை மிகவும் மோசமடைந்து; 

பழுதடைந்துள்ளதால் அப்பகுதியின் ஒன்றிய குழு உறுப்பினர். வரலட்சுமி அசோக்குமார் அவர்கள் சாலையை சீரமைத்து தரக்கோரி ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் கடம்பநல்லூர் பிள்ளையார்கோவில் தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெருக்களில் ரூ. 10 இலட்சம் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றது. 

இதனை, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்கக்கோரி ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார். அப்போது கடம்பநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர். வரலட்சுமி அசோக்குமார், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர். பவானி வடிவேலு, பிரகாஷ், புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!