பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு: மாமியார், மருமகள் கைது!!

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் இருந்து ரூ.10 ஆயிரம் திருடிய கோவில்பட்டியைச் சேர்ந்த மாமியார், மருமகளை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் புது மந்தை தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மனைவி முப்புடாதி (28). இவர் சம்பவத்தன்று சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பஸ் ஏற முயன்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த முப்புடாதி இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பஸ்சில் ஏறமுயன்ற முப்புடாதியிடம் 2 பெண்கள் திருடுவதுபோன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பெண்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்த சுகுமாரன் மனைவி வேலம்மாள் (50) மற்றும் அவரது மருமகள் தனலட்சுமி (20) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களின் வீட்டுக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த வேலம்மாள், தனலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தையும் மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!