பள்ளி விடுமுறை என கால நேரம் கடந்த அறிவிப்பால் மாணவ -மாணவியர்கள் அவதி!!
திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல்லில் கிராமப்புறத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி பள்ளிக்கு வருவது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை 7:00 மணி வரை விடுமுறை அறிவிப்பை நிர்வாகம் அறிவிக்கவில்லை. 8 மணிக்கு பிறகு அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை என அறிவிப்பு செய்தனர்.
இதனால் கிராமத்தில் இருந்து 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர்கள் மழையால் நனைந்து கொண்டே திரும்ப வீட்டுக்குச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆகவே பள்ளி மாணவ- மாணவியர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிப்பை காலை 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக