குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா!!
புதுக்கோட்டைமாவட்டம்,அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆதரவுடன் மரக்கன்றுகள் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை. லட்சுமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள். ராமு, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இறுதி யில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக