மதுரையில் அதிமுக, கம்யூனிஸ்ட் சங்கத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள்!!
மதுரை மாவட்டம்,மதுரை நெல் பேட்டை தயிர் மார்க்கெட்டில் பழைய மார்க்கெட் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக மார்க்கெட்டிற்கு கட்டடம் கட்டப்பட்டது இந்த கட்டடத்தை தற்போதைய அமைச்சர்கள் நேரு மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தார்கள்
மதுரை மாநகராட்சி நிர்ணய டெபாசிட் தொகையை கட்ட முடியாத வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 70 க்கும் வியாபாரிகள் ஒதுக்குப்புறமா கடை நடத்தி வருகிறார்கள்.
இவர் கடையை நடத்தக்கூடாது என்று அதிமுக சங்கத்தை சேர்ந்த தேவதாஸ் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த கனிராஜா, சர்க்கரை,ஜெயபாரதி மற்றும் குற்ற வழக்குகள் உள்ள முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் பண பலம் அதிகரத்தை வைத்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளை தங்கள் சொல்லவது போல் செயல்பட வைத்து அப்பாவி கடைகாரார்களை விரட்டி அடித்து வருகிறார்கள்.
வாழ்வாதாரத்துக்காக போராடும் அப்பாவி வியாபாரிகள் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் உதவியாளரிடம் முறையிட்டால் அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியை என்பதால் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் முறைகேடுகள் நடந்து இருக்குமே என்று வியாபாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது
மேலும் தயிர் மார்கெட்டில் வியாபாரிகளுக்கு இடையே சண்டை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அதிமுகவை சேர்ந்த தேவதாஸ் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் கம்யூனிஸ்ட் சங்கத்தை சேர்ந்த கனிராஜா சர்க்கரை ஜெயபாரதி ஆகியோர் மீது தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக