ராணிப்பேட்டையில் நடைபெற்ற சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலய கல்லறை தோட்ட கல்லறை திருநாள் நிகழ்ச்சி!!
ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலய கல்லறை தோட்ட கல்லறை திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ மரியாள் ஆலய போதகர். ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆராதனை. இந்த ஆராதனையில் ஆலய செயலாளர். சைமன் டைட்டஸ் ராஜ்குமார் பொருளாளர். பால் தேவதாஸ் மற்றும் ஆலையை அங்கத்தினர்கள் பங்கேற்று கல்லறை திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இதில் மரித்தவர்களின் உறவினர்கள் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏத்தி நினைவுகூர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக