சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடி குளிக்குமாறு கோழ சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பு பதிவானதைத் தொடர்ந்து இந்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது
நீர்நிலைகளில் தண்ணீர் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும்போது இந்த நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால், சுகாதாரத்துறை அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக