கடலாடியில் சீறிப்பாய்ந்த காளைகள் மாட்டு வண்டி பந்தயம்!!
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஆம்பனூர் அரியனாதபுரம் ஸ்ரீ விஸ்வநாதன் மற்றும் நொண்டி ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவிலின் 19ஆவது பொங்கல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இங்கு முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டின் முக்கிய பாரம்பரிய விழாவாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கடலாடி நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்த மாடுகள் விறுவிறுப்பான மாட்டுப் பந்தயம் போட்டி இந்த பாரம்பரிய போட்டியில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 63 ஜோடி மாடுகளுடன் கூடிய 45க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக