திண்டுக்கல் அருகே நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை கண்டித்து திடீர் சாலை மறியல்!
திண்டுக்கல் நத்தம் துரைக்கமலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் அவதூறாக பேசுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்களுடன் நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர். அருண் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக