ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேம் !!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர் எல்லா கடவுள்களுக்கும் அபிஷேகம் நடக்கும் ஆனால் சிவபெருமானுக்கு மட்டும் தான் அன்னத்தில் ஆன அபிஷேகம் நடைபெறும் கோடி சிவலிங்கங்களை தரிசித்த புண்ணியத்தை தரும் அபிஷேகம் தான் அன்னாபிஷேகம் கல்லில் இருக்கும் தேரையிலிருந்து கருப்பையில் இருக்கும் உயிர் வரைக்கும் எல்லா உயிரினங்களுக்கும் உணவளிப்பவர் சிவபெருமான், ஆகவே சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும் லிங்கத்தை அன்னத்தினால் மூடி அலங்கரித்து சிறப்பாக அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவார்கள் வழிபாடும் முடிந்த பிறகு அந்த அன்னத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள் குழந்தை வரம் வேண்டுவோர் அந்த அன்ன பிரசாதத்தை வாங்கி உண்டால் கட்டாயம் குழந்தை பேரு உண்டாகும் என்பது ஐதீகம்.சோறு உண்ட இடம் தான் சொர்க்கம் என்பார்கள் அதனை உணர்த்தும் விதமாகத்தான் சோறு கண்ட இடம்தான் சொர்க்கம் என்று கூறியுள்ளனர் ஐப்பசி பௌர்ணமி அன்றுதான் சந்திரன் மிகவும் பிரகாசமாக இருக்கும்.அன்று தான் பூமிக்கு மிக அருகாமையில் சந்திரன் தோன்றுவார் இதனால்தான் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தினார்கள். சிவனுக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கத்திற்கு சமம் இதனால்தான் அன்னாபிஷேகம் பார்ப்பவர்கள். ஒரு கோடி சிவலிங்கம் தரிசித்த பலன் புண்ணியம் என்று கூறுவார்கள் எல்லோருக்கும் அன்னம் கொடுக்கின்ற அன்னபூரணியை இடமாகக் கொண்ட மாதொருபாகமாக சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்தால் வாழ்வில் அன்னத்திற்கு பஞ்சமே இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!