புதுக்கோட்டைபிசானத்தூர் கிராமத்தில் துரை வைகோ எம்பி. ஆய்வு!!
புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்தூர் கிராத்தில் உயிர்மருத்தவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி எம்.பி..துரை வைகோ சம்பவ இடமான பிசானத்தூர் வருகை புரிந்து ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
இதில் மாவட்ட செயலாளர். எஸ்.கே கலியமூர்த்தி, அரசிய ஆலோசனைக்குழு உறுப்பினர். அட்வகேட் சின்னையா (எ) கா.சி. சிற்றரசு, மாவட்ட பொருளாளர். எஸ். ராஜா ஆதிமூலம், மாவட்ட துணைச் செயலாளர். வி.கே.மதியழகன், கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர்.வைரமூர்த்தி, மற்றும் திரளான கழக நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.




கருத்துகள்
கருத்துரையிடுக