திமிரி ஒன்றியக்குழு கூட்டம் நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர். எஸ்.அசோக் தலைமை தாங்கினார். துணை தலைவர். ஜெ.ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர். சைபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசின் உத்தரவின் படி மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் புதிய ஒன்றியக்குழு உறுப்பினராக சென்னசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த கோ.ராஜா நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தலைவர், துணை தலைவர் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக