விழுப்புரம்; முஸ்லிம் மக்கள் கழகத்தின் காணை ஒன்றிய தலைவராக அன்னியூர் மணிகண்டன் நியமனம்!!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முஸ்லிம் மக்கள் கழகத்தின் காணை ஒன்றிய தலைவராக அன்னியூர் கிராமத்தை சேர்ந்த ஆவணி அவர்களின் மகன்
ஆ.மணிகண்டனை 22.11.2025 அன்று முதல் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில இளைஞரின் தலைவர் வி.விக்ரம், விழுப்புரம் மாவட்ட தலைவர். ஜா.ஷோவுகத்அலி, விழுப்புரம் மாவட்ட விவசாய அணி செயலாளர்.சு.ஏழுமலை, விழுப்புரம் நகர செயலாளர்.சி.சுஹைல் முஹம்மத், விக்கிரவாண்டி தொகுதி தலைவர் ரா.சின்னையன், ஆகியோரின் பரிந்துரையின் பெயரில் நியமனம் செய்துள்ளதாகவும், பொறுப்பை ஏற்றுக் கொண்டு சமூக ஒற்றுமைக்காகவும் மனித நேயத்தை கடைப்பிடித்து இந்திய அரசியலமைப்பு 1950-ல் கோட்பாடு (51)அ (ஓ)வின் படி உங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிடவும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் கொள்கைக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனவும் தலைவர் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக