40 ஆண்டுகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!
உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட சார் ஆட்சியர். உட்கர்ஸ் குமார் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து விவசாயிகள், வர்த்தகர்கள், கால்நடை வியாபாரிகள், மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வரும் மல்லபுரம் மயிலாடும்பாறை மலை வழி சேதமடைந்த சாலையை அவசரமாக சமப்படுத்தி விரிவாக்கம் செய்து பஸ் போக்குவரத்தை இயக்க வேண்டும் என கோரிக்கை மனு. இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சேடப்பட்டி ஒன்றியம் தேனி கடமலைக்குண்டு ஒன்றியத்தை இணைக்கக் கூடிய மல்லபுரம் மயிலாடும்பாறை சாலையை 40 ஆண்டுகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் தமிழக முதல்வரும் அது சார்ந்த அரசு துறையினரும் சேர்ந்து இந்நிலையை சரி செய்து செய்யும்படி ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக