வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்!மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா,, வளத்தூர் ஊராட்சியில், நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி IAS அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர். வி.அமுலு விஜயன், குடியாத்தம்
ஒன்றிய குழு தலைவர். சத்யானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். ஆனந்தி முருகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர். பிரியா சக்திவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், வட்டாட்சியர். பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர். ஹேமலதா, ஊராட்சி
மன்றத் தலைவர். சே.நிர்மலா சேட்டு, ஊராட்சி மன்ற செயலாளர் ஆர்.ரேவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்
கருத்துரையிடுக