கும்பகோணம்TO பண்ருட்டி இணைப்பு சாலையில் போக்குவரத்து காவலர் நிற்பது போன்று உருவ உவமையை நிறுவிய ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர பகுதிகளில் ஏற்படும் விபத்தினை தடுக்கும் பொருட்டு, சாலை பாதுகாப்பை ஏற்படுத்தும் விதமாக கும்பகோணம் - பண்ருட்டி இணைப்பு சாலை(link Road) சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் நிறுவியும் 24 மணி நேரமும் போக்குவரத்து காவலர் போக்குவரத்து சிக்னலில் நின்று போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துவது போன்றும், போக்குவரத்து காவலர் நிற்பது போன்றும் உருவ பொம்மை நிறுவி அவரது கைகளில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒளிரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய LED Sign board மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக