'கல்வியுடன் சேர்ந்த ஒழுக்கம் தான் ஒரு மனிதனை மேம்படுத்தும்' பள்ளி விழாவில் ஜெயக்குமார் IPS பேச்சு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் வளையமா தேவி வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் குறித்து பேசுகையில் நன்றாக படித்தால் மட்டுமே பெரிய பதவிகளை அடைய முடியும், கல்வியுடன் சேர்ந்த ஒழுக்கம் தான் ஒரு மனிதனை மேம்படுத்தும், ஒழுக்கம் உயிரை விட மேலானது என்று அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக