G.S.நாகரத்தினம் பிறந்த நாளை முன்னிட்டு ஓம் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் அன்னதானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், G.S.நாகரத்தினம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஓம் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது. இதற்காக ஏற்பாடு செய்த பிரியங்கா சங்கத்தின் மாநில மூத்த துணைதலைவரும் சோளிங்கர் கிழக்கு வட்டார தலைவருமான S.உதயகுமார் கூறியதாவது எனது, அரசியல் ஆசான் எம் எல் ஏ A.M,முனிரத்தினம் அவர்களின் விசுவாசி பிசிசி G.S.நாகரத்தினம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்றதொகுதி அன்வர்திகான் பேட்டை ஓம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக ராஜீவ்காந்தி நகரில் வசிக்கும் ஏழைகளுக்கு, இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தேன்.இவ்வாறு கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக