கடலூர்: தரமற்ற சாலை போடப்பட்டதாக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!!
கடலூர் மாநகராட்சி திருப்பாதிரி புலியூர், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக போடப்பட்ட தார்சாலை மிகவும் தரமற்றதாக உள்ளதாக கூறி சாலைகளை கையால் பெயர்த்து மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள். ஏஜி தர்ஷனா, ஏர்டெல். சரவணன் , பரணி முருகன், சக்திவேல் ,ராஜலட்சுமி சங்கர் தாஸ் , மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர் .
இதேபோன்று புதுப்பாளையம் பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட போது மூன்று இன்ச் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது அது குறித்து பொதுமக்கள் காண்ட்ராக்டரிடம் கேட்டபோது மொத்தம் ஆறு இன்ச் ஒரு ஒரு இன்ச் ஆக கமிஷன் தொகை மூன்று நபர்களுக்கு மூன்று இன்ச் தரப்பட்டது மீதமுள்ள தொகை 3 இன்ச்சுக்கு மட்டுமே உள்ளதாக சிமெண்ட் சாலைகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக