புதுச்சேரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா!!
குஜராத் மாநிலத்தின் மணி நகரில் வசிக்கின்ற புதுச்சேரி மாநில தமிழர்கள் சார்பில் இன்று 22.10.2025 அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கந்த சஷ்டி விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பாஜக செயலாளர்.ஜெயக்குமார் ரெட்டியார் குஜராத் மாநில மணி நகர் பகுதியைச் சேர்ந்த புதுச்சேரி தமிழர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக