சனி மஹா பிரதேசத்தின் முக்கியத்துவம் !!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மிகவும் பழமை வாய்ந்த பாண்டிய மன்னன் காலத்து அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று சனி மஹா பிரதோச வழிபாடு நடைபெற்றது.
இந்த சனி பிரதோஷத்தில் ஈசனை வழிபட்டால் 120 வருடங்கள் பிரதோசம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். நந்தி பகவானுக்கு அருகம்புல் வில்வ மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி பச்சரிசி மாவில் நெய் கலந்து நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. இன்றைய நாளில் பரமேஷ்வரனுக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கி கொடுப்பது சிறப்பு. இன்று சிறப்பு அபிஷேகங்கள் பால், பன்னீர், சந்தனம்,திருமஞ்சனம் தேன், விபூதி,தயிர், பழங்கள், இன்னும் ஏராளமான பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். நந்தி பகவானுக்கும் இந்த சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். சனி மகா பிரதோசத்திற்கு ஏராளமான பக்தர்கள் சுற்று வட்டார பகுதி. மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக