வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்த அமைச்சர்கள் சேகர் பாபு, எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்!!
கடலூர்மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, திருஅருட்பிரகாச வள்ளலாரின் 203-ஆம் வருவிக்க உற்றநாள் விழாவினை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுடன்
இன்று (05.10.2025) கடலூர் மாவட்டம், வடலூர், திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு, சன்மார்க்க கொடியினை ஏற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்து, பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS மற்றும் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக