வடலூர் நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்!!
கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு முருகன் கோயில் அருகில் உள்ள ஜோதி நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வார்டு சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடலூர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது குறித்து குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தின் மூலம் மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக