நாழி மலை புரட்டாசி பௌர்ணமி வழிபாடு !!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகில் டி சுப்புலாபுரம் நாழி மலை அருள்மிகு ஸ்ரீ மல்லேஸ்வரன் கோவில் புரட்டாசி பௌர்ணமி விழா விமர்சையாக நடைபெற்றது இக்கோயில் 2500 அடி உயரத்தில் உள்ளது மலை உச்சியில் உள்ள இந்த கோயிலில் மல்லேஸ்வரன் அவரது சீடர்களுடன் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடக்கின்றது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மூன்றாம் செவ்வாய்க்கிழமை விழா நடைபெறும் கடந்த 300 ஆண்டுகளாக இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பௌர்ணமி நாளில் இம்மலையின் அடிவாரத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருவது இக்கோயிலின் சிறப்பு விழாவில் ஊரின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மலை உச்சியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்படுகிறது மேலே மலை உச்சியில் சுனையில் தண்ணீர் எடுத்து தான் சமையல் செய்து ஈசனுக்கு படைத்தனர். வான வேடிக்கை உறுமி மேளத்துடன் சிறப்பாக கொண்டாடினர்.
தேனி செய்திகளை சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக