காட்பாடி தூய நாற்கருணை நாதர் திருத்தளத்தில் நடைபெற்ற விவிலிய விழா!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தளத்தில் மற்றும் நடைபெற்ற விவிலிய விழா கொண்டாடப்பட்டது. ஜோ. லூர்துசாமி பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி நடைபெற்றது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். அனைவருடைய கைகளில் திரு விவிலியம் ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி திருப்பலி ஒப்புக் கொடுத்தனர். இத்திருப்பலியில் பங்கு பேரவை உறுப்பினர்கள், கன்னியாஸ்திரிகள் அன்பிய குடும்பங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு மாத காலமாக ஜெபமாலை அன்னை மாதமாக வினாடி வினா போட்டி, மாறுவேட போட்டி, பாட்டு போட்டி மற்றும் மனப்பாடம் வசனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் பாக்யராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக