கே. எம். கார்டன் பகுதியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி இன்று (20.10.2025) திரு.வி.க நகர் தொகுதி, 6வது மண்டலம், 76வது வட்டம், பட்டாளம், கே.எம். கார்டன் பகுதியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தை (K.M. Garden Pumping Station) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வணக்கத்திற்குரிய மேயர்.ஆர்.பிரியா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள். எம்.சாமிக்கண்ணு, செ.தமிழ்வேந்தன், மாமன்ற உறுப்பினர்.தமிழ்ச்செல்வி. சசிகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக