பூட்டுத்தாக்கு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பொதுமக்கள் பெருந்திரளாக வருகை தந்திருந்தனர். முகாமில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைத் துறைசார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். மக்களின் குறைகளை விரைவாகப் பரிசீலித்து, உரிய தீர்வு காணப்பட, ஊராட்சி மன்றத் தலைவர் அருண் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டார்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக