நவராத்திரி கோலகலமான கொலு கொண்டாட்டம்!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகில் டி சுப்புலாபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோலாகலமாக கொலு வைக்கப்பட்டுள்ளது 9 நாளும் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் சிறப்பு நைவேத்தியங்களும் படைக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படுகிறது வேண்டும் வரத்தை அருளும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனை இங்கு அருகில் சுற்று வட்டார பகுதி மக்களும் வந்து தரிசித்து செல்கின்றனர் நவராத்திரி பூஜை என்பது எத்தனை பூஜைகள் கொண்டாடப்பட்டாலும் வருடத்திற்கு ஒருமுறை ஞானத்தின் தேவியாக சரஸ்வதி தேவியையும் செல்வம் ஐஸ்வர்யங்களையும் அளிக்கக்கூடிய லட்சுமி தேவியையும் தைரியத்தை அளிக்கக்கூடிய துர்கா தேவியையும் வணங்கி 9 நாளும் யுத்தங்களை புரிந்து அரக்கர்களை அழித்து வெற்றி பெறுவது இந்த பூஜையின் சிறப்பு ஆகும்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக