வேப்பூர்: காவலருக்கு மரியாதை செலுத்திய எஸ்பி!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் காவல் நிலைய தலைமை காவலர் கலைராஜா சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாலகிருஷ்ணன், அப்பாண்டராஜ் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், காவல் கண்காணிப்பாளர் கலைராஜாவின் குடும்பத்தாருக்கு அரசால் வழங்கப்படும் இடைக்கால நிவாரண நிதியான ரூபாய் 1 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக