கரூர்: செல்வம் நகர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி, தவுட்டுப்பாளையம் AC நகர் - செல்வம் நகர் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் மாநாடு செந்தில் பாலாஜி அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், கரூர் மாவட்ட ஆட்சியர். மீ. தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக