பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எஸ்.ஜி.சி பெருமாள்!!
இராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி வேளியநல்லூர் ஊராட்சி பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் இன்று 08/10/2025 பிள்ளைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர். அமுதா சண்முகம் அவர்களின் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது இதில் அனைத்து அரசு துறைகளும் மக்கள் பயன்பாட்டில் கொண்டு நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.பி.ரவீந்திரன் நெமிலி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள்அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் வேளியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில் S.மணிவண்ணன், நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர். ராஜலட்சுமி, வட்டாட்சியர். வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர். சண்முகம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் B.மார்கண்டேயன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் E.வெங்கடேசன், நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர் C.சம்பத், நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர் K.B.சம்பத், மாவட்ட பிரதிநிதி. R.எல்லப்பன், நெமிலி தெற்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர். சதிஷ், கிளை கழக செயலாளர்கள். வெங்கடேசன், தசரதன், நேத்தாஜி, கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்



கருத்துகள்
கருத்துரையிடுக