காட்டுமன்னார்கோவில்: ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு!!
கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடி கிராமத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இலவச ஆம்புலன்ஸ் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. அறக்கட்டளை நிறுவனர். முகமது ஜாக்கீர், ஆம்புலன்ஸின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கல்வீசி சேதப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக