சென்னை: திரு. வி. க நகரில் கட்டப்பட்ட வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-76, செல்லப்பா தெருவில், கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேயர்.ஆர்.பிரியா, திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர். தாயகம் கவி, ஆணையாளர். .ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர்.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர்.சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர். எஸ். தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக