புதுச்சேரியில் நடைபெற்ற பல்நோக்கு உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி!!
புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பணிபுரிந்த் ஓய்வு பெற்ற மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி இன்று (10.10.2025) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
முதற்கட்டமாக 582 ஓய்வு பெற்ற மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர்களுக்கு ரூ.10, 72,00,000/-க்கான (ரூபாய் பத்து கோடியே எழுபத்திரெண்டு இலட்சம்) காசோலையினை மாண்புமிகு முதலமைச்சர். ரங்கசாமி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர். செல்வம் R , மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர். க. ஜெயக்குமார், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்ய் துறை இயக்குநர் செல்வி P. முத்துமீனா, மேலாண் இயக்குநர். பி சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக