கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று 09.10.2025 தேதி விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர். E.S. உமா IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த செப்டம்பர் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள்.ரூபன்குமார், பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள். அம்பேத்கார், கதிரவன், பார்த்தசாரதி, சிவப்பிரகாசம், சுரேஷ்பாபு, பாலாஜி, பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளர்கள். ஆனந்தகுமார், சுரேஷ் முருகன், சந்துரு, பிரகாஷ்பதி, சையத் அப்சல், தங்கவேல், ஜம்புலிங்கம்,முரளி, செந்தில்குமார், தேவநாதன்,
சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 92 காவல்துறையினருக்கு விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர். E.S. உமா IPS சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக