விடிய விடிய பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் மழைநீீரில் கீழே சாய்ந்து மழை நீீீீரில் மூழ்கின. 80 ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் முழுவதும் கீீழே சாய்ந்து விட்டதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக