இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் சர்க்கிள் வட்டப் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்.ஆர்.காந்தி!!
ராணிப்பேட்டைமாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி நேற்று ஆற்காடு பாலாற்றங்கரை பழைய பாலம் அருகில் மகாத்மா காந்தி அறக்கட்டளை மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சர்க்கிள் வட்டப் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால்.இ.கா.ப, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் MLA ,நகரமன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன், துணைத் தலைவர். பவளக்கொடி சரவணன், அறக்கட்டளை தலைவர். இலட்சுமணன், பென்ஸ் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.


கருத்துகள்
கருத்துரையிடுக