கடலூர்: கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாட்டில் இன்று (அக்.02) முதல் அடுத்த இரு தினங்களுக்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால்இன்று (அக்.02) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக