தேமுதிக நெமிலி துணை செயலாளர். பாலகுருவின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த நெமிலி மேற்கு ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் M.பாலகுரு (எ) பாலு அவர்களின் தந்தை M. முத்துக்கிருஷ்ணன் (எ) ராஜா அவர்கள் 26/10/2025 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தேமுதிக மாநில தொண்டர் அணி துணை செயலாளர். SS. தினகரன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் தேமுதிக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்


கருத்துகள்
கருத்துரையிடுக