வெங்கடாம்பேட்டை: சுகாதார நிலையம் அமைக்க அடிக்கல்!!
கடலூர் மாவட்டம்,நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் 15வது நிதியின் கீழ். 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர். சபா. இராசேந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக