அரக்கோணத்தில் அன்னதானம் வழங்கிய ஜெயின் சமூகத்தினர்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு பொது மருத்துவமனை எதிரில் தி டவுன் ஹால் உள்ளது. இந்த டவுன் ஹாலில் புதிய நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டு வந்தது. அதன்படி சங்க முன்னாள் நிர்வாகி எம்எஸ் ரவீந்தர் மற்றும் கண்பத் ஆகியோர் ஒருங்கிணைப்பில் டவுன் ஹால் தலைவர் ஜிகே. பாபு ஜீ முன்னிலையில் டவுன்ஹால் பொது செயலாளர். டாக்டர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக சமூக நல பொறுப்பாளர். முருகவேல் அனைவரையும் வரவேற்றார்.
அன்னதான நிகழ்ச்சியில் டவுன்ஹால் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள், ஜெயின் குடும்பத்தார் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக