புதுச்சத்திரம்: வயிற்று வலியால் தற்கொலை!!
கடலூர் மாவட்டம்,புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த சாமிதுரை என்ற கூலித்தொழிலாளிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில், அவர் 12 மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக