கனமழை காரணமாக திருவதிகை குட்டை தெரு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பண்ருட்டி நகரம் 13 வார்டு திருவதிகை குட்டை தெரு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை இன்று 22.10.2025 காலை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி சரி செய்ய உத்தரவிட்டார்.
உடன் ந நகர அவைத் தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணை செயலாளர்கள். கௌரி, அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முக வள்ளி, பழனி, கிருஷ்ணராஜ் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக