பட்டா வழங்க மறுப்பு! துணை தாசில்தாரிடம் புகார் மனு!!
ராணிப்பேட்டை மாவட்டம் பட்டா வழங்க மறுப்பதாக அரக்கோணம் துணை தாசில்தாரிடம் லஞ்சம் கொடாதோர் இயக்கம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ராணிபேட்டை மாவட்ட தலைவர். ராஜேந்திரன், மாவட்ட செயளாலர். மகராஜன், மாவட்ட பொருளாளர். புருஷோத்தமன், மாவட்ட கொள்கை பரப்பு செயளாலர். ஜார்ஜ், துணை தலைவர். மானோகரன், உதவி செயளாலர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கொடுக்கபட்டமனுவில் கூறப்பட்டு இருந்தாவது, செல்வம் என்பவருக்கு சொந்தமான 5 பட்டா அவருடைய பெயரில் உள்ளது. இதில் மூன்று பட்டாவை பெண் சர்வேயர் வழங்கி விட்டார், மீதமுள்ள இரண்டு பட்டாகளை கேட்டதற்க்கு மொத்த பட்டாகளுக்கும் ஒரு தொகை தருமாறு அந்த அலுவலர் கேட்டார் ஆகவே தொகை கேட்ட சர்வேயர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம் இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக