சாலையில் கிடந்த மணி பர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்களுக்கு பாராட்டு!!
கடலூர் மாவட்டம்,வடலூர் கரைமேடு வருவாய் கிராமத்தில் சாலையில் கிடந்த மணிபர்சில் ரூபாய் 12840 பணம் இருந்ததை எடுத்த உதயநிதி, வசந்தகுமார் சீனிவாசபுரம் பின்னலூர் ஆகியோர்கள் வடலூர் காவல் ஆய்வாளர். உதயகுமார் ஒப்படைத்தனர். உதவி ஆய்வாளர். பரந்தாமன் விசாரணை மேற்கொண்டு மணிபர்சை தொலைத்த நபர் அஜித்குமார், த/பெ குணசேகரன், ஜெயப்பிரியா நகர் விருதாச்சலம் என்பவரை கண்டுபிடித்து, காவல் நிலையம் வரவைத்து ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்ட உதயநிதி, வசந்தகுமார் ஆகியோர்களை வடலூர் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பாராட்டினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக