அமைச்சரை சந்தித்த தமிழ் படைப்பாளர் சங்கத்தினர்!!
இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள மாவட்ட தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை அறிந்து சங்கத்தின் பொருளாளரும் KPK ரியல் எஸ்டேட் அதிபருமான கேபிகே.பிரபாகரன் அவர்களும், கௌரவ ஆலோசகரும் அரக்கோணம்
முருகன் பார்மசி அதிபருமான இரா.வெங்கட்டரமணன் ஆகியோருடன் தலைவர் கவிஞர். சீ. மோகன்.இணைந்து கண்காட்சிக்கு சென்றனர் பல்வேறு பதிப்பாளர்களை சந்தித்து ,புத்தகங்கள் பெற்றுக் கொண்டனர், இதனிடையே கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து , பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை வழங்கனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக