கடலூர்: 42 கிலோ கஞ்சா பறிமுதல்; 27 பேர் கைது!!
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்து விநியோகம் செய்ய இருந்த ஒடிசா மாநில வியாபாரி குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று கடலூர் மற்றும் சிலம்பிநாதன்பேட்டை பகுதிகளில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக