அரக்கோணம் ரயில்வே ஆலோசனைக் கூட்டம்! 3ம் கண் பயன்படுத்தி கொள்ள நகராட்சிக்கு அனுமதி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ரயில்வே இரட்டை கண் பாலத்தில் விரிவாக்க பணி துவங்க இருப்பதால் ரயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது
3ம் கண் பயன்படுத்தி கொள்ள நகராட்சிக்கு அனுமதி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் இரட்டைக்கண் பாலம் அமைந்துள்ளது இந்தப் பாலத்தில் விரிவாக்க பணிக்காக நவம்பர் 2ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை போக்குவரத்து நிறுத்த ரயில்வே முடிவு அறிவித்தது எனவே இதற்கான ஆலோசனை கூட்டம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது அப்பொழுது அதிகாரிகள் மக்கள் கருத்தை கேட்டறிந்தனர் அப்போது பலர் பல கோரிக்கை முன்வைத்தனர்
சட்டமன்ற உறுப்பினர் பேசிய போது பாலத்தின் பணி துவங்குவதற்கு முன் பாலம் அகலப்படுத்துவோம் அல்லது மேம்பாலம் அமைக்கவும் உறுதி அளிக்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் கவுன்சிலர் துரைசீனிவாசன் பேசியபோது
3ம் கண் பாலத்தை நகராட்சி பயன்படுத்தி கொள்ள அனுமதி கோரினார் அதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ரயில் பயணிகள் சங்க தலைவர். நைனா மாசிலாமணி பேசிய போது
வேக ரயில்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் மின் தூக்கி நடை மேடை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து பேசினார் மேலும். நகர மன்ற உறுப்பினர்கள் பாபு, நரசிம்மன் மற்றும் வழக்கறிஞர் பத்மநாபன் தேவராஜ், ரகுநாதன், கிருஷ்ணமூர்த்தி, கைனூர் தலைவர் உமா மகேஸ்வரி கூட்டத்தில் பேசினர் பொதுமக்கள் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக