அரக்கோணத்தில் நடைபெற்ற 25 வது வார்டு மக்களுக்கான சபை கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சி 36 வார்டுகளில் சிறப்பு சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பழணிப்பேட்டை 25 வது வார்டு மக்களுக்கான சபா கூட்டம் போல் நாயுடு தெருவில் ராமர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர். துரை சீனிவாசன் தலைமை தாங்கினார்; ஆணையாளர். ஆனந்தன் நகராட்சி மேற்பார்வையாளர். பிரேம் சுந்தர் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு மனுக்களை பெற்றுக் கொண்டனர். அவற்றில் கால்வாய் மற்றும் தெரு விளக்கு பிரச்சனைகளுக்கு முன் உரிமை அளிப்பதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள். நந்தாதேவி பழனி, ரேவதி கன்னியப்பன் மற்றும் சி. என். அன்பு வட்ட செயலாளர். பழனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக